Tuesday, February 14, 2012

உறங்கான்பட்டியில் - தீயில் 6 வீடுகள் எரிந்து நாசம்

மேலூர் உறங்கான்பட்டியில் உள்ளது முத்தாயி ஊரணி. நேற்று மதியம் 3 மணியளவில் இவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் சமையல் செய்யும் போது வீட்டில் தீப்பிடித்தது.
இந்த தீ அருகில் உள்ள சின்னையா, முத்துலட்சுமி, மந்தக்காளை, அமுதா, ஆண்டி ஆகியோர் வீடுகளிலும் பரவியது.
தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய், தானியங்கள், 'டிவி', பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment