Tuesday, November 2, 2010

தீயில் கருகி பெண் சாவு : ஆர்.டி.ஓ., விசாரணை

மேலூர்: திருமணமாகி ஒரு வருடத்தில் கணவன் வீட்டார் கொடுமை தாங்காமல் பெண் தீயில் கருகி இருந்து போனதால், ஆர்.டி.ஓ., விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலூர் கோட்டநத்தம்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி(28). இவருக்கும் ஆலம்பட்டி பாரதிராஜாவிற்கும் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. 14 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனம் சீர்வரிசை செய்யப்பட்டது. தற்போது, மூன்று மாத குழந்தை உள்ளது. குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், சமீபத்தில் வளர்மதி கணவனுடன் கோபித்துக் கொண்டு தாய் வீடு வந்து விட்டார். அவரை, சமாதானம் செய்து,கணவன் வீட்டார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு நேற்று வளர்மதி உடலில் மண்ணெண்ணெ ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, இறந்து போனார். மாமனார் சுப்பிரமணியன், மாமியார் கோமதி, கணவன் பாரதிராஜா மீது வளர்மதியின் தாய் பாப்பா கீழவளவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment